/* */

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார் விபத்து.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
X

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்.

திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி முருகன் கோயில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் காவடி எடுத்துக்கொண்டு மலைக்கோவிலுக்கு வந்தார். காரில் 10 பேர் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து அவர்கள் இரவு கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மலை அடிவாரத்தை நோக்கி வேகமாகச் சென்றது. இந்த காரை ஓட்டுநர் சுரேஷ் கட்டுக்குள் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. அதனால், அங்கு இருந்த இரும்பு வேலிகளை உடைத்துக்கண்டு கார் மேலும் வேகமாக மலைப்பாதையில் பிரதான சாலையை நோக்கி ஓடியது.

செய்வதறியாது திகைத்த சுரேஷ் , கீழ்ப்பகுதியில் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓம் முருகா பெயர் பலகையின் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பக்கம் உடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Updated On: 18 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து