திருத்தணியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் திருமண நிச்சயதார்த்தம்..!
பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம்.
திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தினார்கள்.
முருகப்பெருமானின் 5-வது படை வீடாகத் திகழும் அருள்மிகு திருத்தணி முருகன் கோவிலில் இன்று- ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் நடிகருமான பிரேம்ஜிக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இதற்கு முன்னதாக நேற்று மாலை திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமான கலந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதன் பின்னர் இன்னிசை கச்சேரியில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இணைந்து சினிமா பாடல் பாடி அனைவரையும் அசத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu