பொன்னேரி அருகே லாரி டயர் வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 30 டன் அரிசி சேதம்

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து எரிந்தது.
பொன்னேரி அருகே ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததில் 30 டன் அரிசி சேதம் அடைந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள பஞ்செட்டி அரசு ரேஷன் அரிசி குடோனில் இருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அரசு குடோனுக்கு ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி,திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா சின்னநாகபூடி மாநில நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று லாரி டயர் வெடித்து தீ பற்றி எரிய தொடங்கியது.
இதைனை கண்டவுடன் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ச்சி அடைந்து தீயே அணைக்க முயன்றார். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் அங்கிருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். சாலையின் நடுவே பற்றி எரிந்து கொண்டு இருந்த லாரி உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ பற்றி எரிந்த லாரியை அணைக்க முயற்சி செய்தனர், அதற்குள் லாரி முழுவதுமாக 90 சதவீதம் எரிந்தது. அதிலிருந்து ரேஷன் அரிசி 80 சதவீதம் தீயில் எரிந்து போனது. சேதம் அடைந்த ரேஷன் அரிசி 30 டன் அதாவது 30 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி ஆகும்,
இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலையின் நடுவே ரேஷன் அரிசி லாரியில் தீ பற்றி எரிந்து போன சம்பவத்தால் அந்த பகுதி மாநில நெடுஞ்சாலையில் 60 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ பற்றி எரிந்த காரணத்தினால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu