/* */

திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்தனர் .

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்ட குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பிரதான சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரிலிருந்து வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் சுமார் 1 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மிட்டா, கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ், 32, என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 May 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!