/* */

திருத்தணி: பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

திருத்தணியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் நிறுவனப் பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி: பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து சாலை  தடுப்பு சுவரில் மோதி விபத்து-10 பேர் படுகாயம்
X

திருத்தணியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் நிறுவனப் பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து; இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் இன்று அதிகாலை அரக்கோணம் வழியாக பெரும்புதூர் நோக்கி சென்றது. அரக்கோணம் ரயில்வே உயர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலை தடுமாறிய பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

உடனே அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 July 2021 6:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்