/* */

திருத்தணி : பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் -சமூக விலகல் இன்றி முண்டியடித்த கூட்டம்

திருத்தணி முருகன் கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்தணி : பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் -சமூக விலகல் இன்றி முண்டியடித்த கூட்டம்
X

திருத்தணி முருகன் கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நடைபெற்றது.

விண்ணப்பத்தைப் பெற கூட்டம் முண்டியடித்துக் கொண்டு சமூக விலகளை கடைபிடிக்காமல் வாங்கியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இன்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனைப் பெற ஏராளமானோர் குவிந்து சமூக விலைகளை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மனுக்களை பெற்றதால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை பெற கால அவகாசம் உள்ள நிலையிலும், பொதுமக்கள் இன்று முந்தி அடித்துக்கொண்டு மனுக்களைப் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கோவிலில் ஊழியர்கள் மரத்தடியில் அமர்ந்து டோக்கன்களை வழங்கியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் தற்போது தொற்றுநோய் பரவாமல் குறைந்துள்ள நிலையில் இதுபோன்று சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 July 2021 6:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!