/* */

ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியின் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்

HIGHLIGHTS

ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

சென்னை பூந்தமல்லி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் திரு.வி.க.சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம்கவி மற்றும் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் உள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் ரூ.86 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின்போது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தாதவது, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 141 கிரவுண்ட் நிலத்தில் பள்ளிக் கட்டடங்களுடன் கூடிய 32 கிரவுண்ட் இடம் தனியார் நிர்வாகத்திடமிருந்து திருக்கோயில் நிர்வாகத்திற்கு சுவாதீனம் பெறப்பட்டது. தற்போது ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பள்ளியில் ஏற்கனவே 649 மாணவ, மாணவியர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தார்கள். தற்பொழுது திருக்கோயில் நிர்வாக கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு மாணவ, மாணவிகளின் சேர்க்கை 830 ஆக உயர்ந்துள்ளது.

மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு மைதானம் அமைத்து அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்படும். பள்ளி வளாகத்தை சுற்றி மதில்சுவர் அமைத்து அதில் ஆன்மிகம் சம்பந்தமான புகைப்படங்கள், புராதான சின்னங்கள் வரையப்படும். முகப்பில் திருக்கோயில் தோற்றம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தயார் செய்து பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திரு.வி.க.சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி மற்றும் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா கௌரி, திருக்கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Updated On: 26 Aug 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!