/* */

புதிதாக கட்டப்பட்டு வரும் எண்ணெய் ஆலையில் கிராம மக்கள் முற்றுகை

மீஞ்சூர் அருகே இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவன கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

புதிதாக கட்டப்பட்டு வரும் எண்ணெய்  ஆலையில் கிராம மக்கள் முற்றுகை
X

முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சார்பில் புதியதாக ஆலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் சேமிப்பு கிடங்கு, பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பகுதியில் அமைய உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதியதாக நிறுவப்பட உள்ள இந்த ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க கோரி வல்லூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ஊராட்சியில் நிறுவப்படும்

நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றார் போல வேலை வாய்ப்பினை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் அப்போது வலியுறுத்தினர்.

வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 April 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி