வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...

வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...
X
வாலிபர் கைது.

வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் அருணகிரி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் மதுரை கூட்டுச் சாலையில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெங்கலில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த வாலிபரை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நான் யார் தெரியுமா என்னையே நிறுத்தி ஆய்வு செய்கிறீர்களா என்று போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வாலிபர் மெய்யூர் காலனி நீலகண்டன் (35) என்பது தெரியவந்தது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture