திருப்பாலைவனம் கோயிலில் திருப்பாலீஸ்வரர் தேரோட்டம்

திருப்பாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் ஸ்ரீ லோகாம்பிகை சமேத உடனுறை ஸ்ரீ திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆண்டின் பங்குனி பிரமோற்சவ திருவிழாவின் ஒரு பகுதியாக திருப்பாலீஸ்வரர் திருத்தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்த பின்னர் வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீப, தூப, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த திருதேரை விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திருப்பாலைவனத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வணங்கி வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அங்கு வந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu