/* */

பொன்னேரியில் தேசிய மாணவர் படையினரின் சிறப்பு முகாம்

பொன்னேரியில் தேசிய மாணவர் படையின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரியில் தேசிய மாணவர் படையினரின் சிறப்பு முகாம்
X

பொன்னேரியில் தேசிய மாணவர் படையின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படையின் சார்பில் பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராணுவ வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

முகாமின் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ராணுவத்தின் கர்னல் மசூம்தார் பங்கேற்றார்.முன்னதாக சுற்றுச் சூழல் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாணவிகள் நடத்தி காட்டினர்.

இந்திய ராணுவத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து ஒளிப்படம் வாயிலாக மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கும் வகையிலான மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

விழாவில் கர்னல் மசூம்தார் உரையாற்றுகையில் இந்த முகாமில் உங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் சற்று கடினமாக இருந்தாலும் பிற்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டார். பின்னர் அவர் படை முகாமில் மாணவிகள் சார்பில் அளிக்கப்பட்ட ராணுவ முறையிலான அணிவகுப்பை ஏற்று கொண்டு மாணவிகளை வெகுவாக பாராட்டினார்.

Updated On: 19 May 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!