/* */

விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருவருக்கு இழப்பீடு வழங்காததால் பள்ளிக்கு சீல்

மீஞ்சூர் அருகே பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்காததால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருவருக்கு இழப்பீடு வழங்காததால் பள்ளிக்கு சீல்
X

தனியார் பள்ளிக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்த அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே ஒன்றாம் தேதி கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது மீஞ்சூர் பேரூராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர் கோவிந்தன் மற்றும் ஒப்பந்த பணியாளர் சுப்புராயலு ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் சிமியோன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-இன் கீழ் உயிரிழந்த 2 குடும்பங்களுக்கும் 3 நாட்களுக்குள் தலா 15 லட்சம் வழங்க உத்தரவிட்டும், இழப்பீடு வழங்கப்படாததால் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 7 May 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  2. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  3. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  4. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  6. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  7. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  8. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  9. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?