/* */

ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க ஆற்றுக்கு செல்லும் சாலையில் பள்ளங்களை வெட்டி முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

HIGHLIGHTS

ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
X

மணல் கடத்தலை தடுக்க பாதையில் பள்ளம் தோண்டிய பொதுப்பணித்துறையினர்

ஆந்திர மாநில எல்லையான திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காட்டு ஏரியில் கலக்கும் ஆரணி ஆறு உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் ஆரணி ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பொதுப்பணித்துறையினர் பொன்னேரி வழியாக ஆரணி ஆற்றிற்கு செல்லும் வழிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளங்கள் வெட்டி ஆற்றில் வாகனங்கள் சென்று மணல் எடுக்காதவாறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 10 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  2. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  4. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  5. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  8. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா