பொங்கல் பண்டிகை விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

பொங்கல் பண்டிகை விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு  வழங்கல்
X

சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறுவர்கள் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டி சென்றனர்.

Pongal Festival Sports Competition செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Pongal Festival Sports Competition

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் எங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பாடியநல்லூர் எம்.ஏ நகரில் நகர் காய்ஸ் நண்பர்கள் குழு சார்பில் மாட்டுப்பொங்கலான இரண்டாம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காலை முதல் பெண்களுக்கான கோலப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஸ்லோ சைக்கிள், ரிலே பால், ரிலே ஸ்டோன் மற்றும் உரியடி போட்டிகளில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.இதையடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை மாணவர்கள் அபாரமாக விளையாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தலைவர் சன் முனியாண்டி, சமூக ஆர்வலர்கள் பால் செபஸ்டின், அர்ஜுனன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.விழா ஏற்பாடுகளை நகர் காய்ஸ் நண்பர்கள் குழு நிர்வாகிகள் நாகலிங்கம், சந்திரன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story