/* */

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21 லட்சம் செலவில் கழிப்பறை திறப்பு

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21 லட்சம் செலவில் கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21 லட்சம் செலவில் கழிப்பறை திறப்பு
X

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்ட கழிப்பறை. 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது இதில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்விபயின்று வருகின்றனர்.

மாணவர்களுக்குபோதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் ரோட்டரி கிளப் சென்னை மற்றும் நாடி டெக்னாலஜி இணைந்து சமூக பங்களிப்பு நிதி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பிலான இரண்டு கழிப்பறைகள் 50க்கும் மேற்பட்ட மாணவியர்கள் அமரக்கூடிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காவிரி தலைமை தாங்கினார், ரோட்டரி மெட்ராஸ் பிரசிடெண்ட் ஜெயஸ்ரீ ஸ்ரீதர், நாடி கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் கபர், மாதவரம் ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஹேமபூஷணம், நகரச் செயலாளர் முத்து, தியாகராஜா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ரவி, சமூக ஆர்வலர் கருணாகரன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வருங்காலங்களில் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதன்மை பெரும் மாணவிகளுக்கு மேல்நிலைப் படிப்பை அவர்கள் தொடர அனைத்தும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும் என ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

பின்னர் மாணவ, மாணவியர்களின் கண் கவரும் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றினார்.

Updated On: 25 Jun 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...