/* */

வடக்குநல்லூர் ஊராட்சியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம்

வடக்குநல்லூர் ஊராட்சியில் கல்லூரி மாணவர்களின் நாட்டுநலப்பணி திட்ட முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

வடக்குநல்லூர் ஊராட்சியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம்
X

நாட்டுநல பணித்திட்ட முகாமை தொடங்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், வடக்குநல்லூர் ஊராட்சியில் சென்னை சேலைவாயலில் இயங்கிவரும் திருத்தங்கல் நாடார் கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் பங்கேற்கும் ஏழு நாள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.

வடக்கு நல்லூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அன்பு தலைமை தாங்கி நாட்டுநலப்பணி திட்ட முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் தலைவர் சவரிமலையான், தாளாளரும்,செயலாளருமான செல்லப்பழம், முதல்வர் முனைவர் ஸ்ரீவித்யா, துணை முதல்வர் முனைவர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன்,உலகநாத அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் முனைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் பிரபாகரன், நதியா, அருணா, ஆரோக்கியமேரி, சீனிவாசன், ஊராட்சி செயலர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சம்பத்குமார் வரவேற்றார். முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Updated On: 20 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது