சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 பேர் கைது

சோழவரம் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த 8.வயது சிறுமியின் உடற்கூராய்வில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தததையடுத்து இதில் தொடர்புடைய முதியவர் உள்பட 6 பேரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூலையில் புதுச்சேரியை சார்ந்த குடும்பம் ஒன்று செங்கல் சூலையில் தொழில் செய்து வந்தனர் இந்த நிலையில் இறந்து போன சிறுமியின் தாய் தந்தை இறந்த நிலையில் சிறுமியின் தந்தையின் அக்காவான அத்தை மாமா ஆகியோர் சிறுமியை வளர்த்து படிக்க வைத்து வந்தார் .
இதனை அடுத்து கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்கள் ஓடி வந்து சிறுமியையை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் சிறுமியின் உடலில் காயங்கள் உள்ளது தெரிய வந்தது .
சிறுமி இறந்த இரண்டு நாட்கள் ஆன நிலையில், சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. அதன் பிறகு இந்த வீடியோ குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்கிற சின்னதுரை, பாஸ்கர், சதீஷ்,ரமேஷ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேரும் வீடியோவை மறைவாக நின்று எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பாலு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் பாலு மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஐந்து பேர் உட்பட ஆறு பேர் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu