/* */

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டையில் 3 டன் குட்கா பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர வேட்டை நடத்தப்படுகிறது. தற்போது கஞ்சா வேட்டை 2.0 நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் பகுதியில் லாரியில் இருந்து சிறிய வாகனத்திற்கு கஞ்சா மாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாலையோரத்தில் லாரியில் இருந்து சிறிய வாகனங்களுக்கு குட்காவை மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 20லட்ச ரூபாய் மதிப்புள்ள 3டன் குட்காவையும் அவற்றை கடத்த பயன்படுத்திய 1லாரி, 3சிறிய வாகனங்கள் என மொத்தம் 4வாகனங்களை பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தி கொண்டு சிறிய வாகனத்தில் வைத்து புறநகர் பகுதியில் விநியோகம் செய்ய முயன்ற அருள்குமார், குமரேசன், சுபாஷ், பொன்னுத்துரை, தட்சிணாமூர்த்தி ஆகிய 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!