பொன்னேரி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசன், துணைத் தலைமையாசிரியர் சுரேஷ், டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு, இப்பள்ளியில் கல்வி பயிலும் 158 மாணவர்கள், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 336 மாணவிகள் என மொத்தம் 494. மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் உமாபதி, நல்லசிவம், மற்றும் வில்சன், பாலாஜி, பிரபு, ஜெயசீலன், உள்ளிட்ட ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu