சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய 4 பேர் போக்சோவில் கைது

போக்ஸோவில் கைதான நான்கு வாலிபர்கள்
திருவள்ளூரில் 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தமிழர் படையின் வீரலட்சுமி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்தார்.
தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பென்னலூர்பேட்டை காவல் துறையினர், 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ பதிவு செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அஜித் குமார் (25),ஞானமூர்த்தி(20), ராசு(23) மற்றும் அஜித்(26) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.மாடு மேயக்க சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu