/* */

பொன்னேரி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பொன்னேரி அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நேற்று சுற்றுவட்டார இடங்களில் பிற்பகல் சுமார் 30.நிமிடத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

பிற்பகல் பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற விவசாயி தமது உறவினர்களுடன் பச்சைப்பயிறு மூட்டைகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக தார்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மின்னல் தாக்கியதில் விவசாயி சரவணன், உறவினர் வேம்புலி ஆகிய இருவர் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விவசாயி சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேம்புலி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பணிகளை மேற்கொண்ட விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 April 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?