மீஞ்சூர் அருகே மேல்நிலைப்பள்ளியில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு

சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே காட்டூரில் அரசு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில், காட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 600 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வந்த மாண்டஸ் புயல் தொடர் மழையின் காரணத்தினால், பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த காரணத்தினால் பள்ளி வளாகத்தில் கால்நடைகள், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் அனைத்தும் பள்ளியின் உள்ளே வருவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் ஊராட்சி நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த அடிப்படை பிரச்சனை குறித்து பொன்னேரி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பெயரில் பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ- மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியில் உள்ள குறைகளை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்திற்குச் சென்று பார்வையிட்டு உணவை பரிசோதனை செய்து பார்வையிட்டு. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இந்த ஆய்வின் போது காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ஜோதீஸ்வரன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu