/* */

சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!

சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!
X

கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த காந்திநகர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மோகனா (35). அதே பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (40) தனியார் நிறுவன காவலாளி. தனியாக வசிக்கும் ஏசுதாஸ்க்கு தினமும் சமையல் செய்து தருவதற்காக, மோகனா அவரது வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று மாலை சமையல் செய்வதாக மோகனா ஏசுதாஸ் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் ஜேசுதாஸ் கதவைப் பூட்டிக் கொண்டு வேகமாக வெளியேறுவதை அருகில் வசிப்பவர்கள் கண்டனர்.

சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏசுதாஸ்சின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மோகனா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுதாசை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 May 2021 3:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?