சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.95 பணம், 175 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி

சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.95 பணம், 175 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி
X

உண்டியல் பணம் என்னும் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள்.

பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 3 மாதத்தில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

6-வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை, ரியல் எஸ்டேட், அரசியல், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் பாபா நம்பிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமைகளில் இப்போவிளுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மீஞ்சூர், செங்குன்றம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இந்நிலையில் கடந்த3- மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலை துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம்,பொன்னேரி ஆய்வாளர் திலகர்,செயல் அலுவலர் மாதவன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருக்கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கிய என்னும் பணியானது மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ94லட்சத்து 93.ஆயிரத்து 34.ரூபாயும், தங்கம்175கிராமும், வெள்ளி9.கிலோ150 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுள்ளது.

Tags

Next Story
Similar Posts
மீஞ்சூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் சேவை பாதிப்பு
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.95 பணம், 175 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் போலீசார்  விசாரணை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி மறியல் போராட்டம்
அமேசானில் தள்ளுபடி..! தேவையானத அள்ளிட்டு போங்க..!
பெரியபாளையம் அருகே வட மதுரையில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வீடுகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன் கண்முன் மனைவி இறந்த சோகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட நூலகம்