/* */

கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை: பொதுமக்கள் வாக்குவாதம்.

பொன்னேரி அருகே நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறி வாக்குவாதம்.

HIGHLIGHTS

கூலி தொழிலாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை: பொதுமக்கள் வாக்குவாதம்.
X

நகைக்கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5சவரன் நகை தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். கூலி தொழிலாளர்களான தங்களது நகைகளை குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வைத்திருந்த நிலையில் தங்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்காததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கவில்லை என கூறி திமுகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On: 23 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க