நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க சங்கிலி திருடிய பெண்

நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து  தங்க சங்கிலி திருடிய பெண்
X

பெண் நகை திருடுவது போல் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சி.

நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொன்னேரியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 26கிராம் தங்க சங்கிலி திருடிய பெண்ணை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் நகைக்கடையில் பெண் ஒருவர் தங்க சங்கிலி வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த பணியாளர் தங்க சங்கிலிகளை காட்டியுள்ளார். நீண்ட நேரம் தங்க சங்கிலிகளை பார்த்த பெண் மாடல் பிடிக்கவில்லை என கூறி நகை ஏதும் வாங்காமல் திரும்பி சென்று விட்டார். சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கடையில் வேறு மாடல் நகைகளை காண்பிக்குமாறு பணியாளரை திசை திருப்பி அக்கம் பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டு தங்க சங்கிலியை லாவகமாக தனது மடியில் போட்டு சேலையில் சுருட்டி மறைத்து கொண்டு அந்த பெண் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் ராகவன் 26கிராம தங்க சங்கிலியை திருடிய பெண் மீது நடவடி‌க்கை எடு‌க்குமாறு பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக் கடையில் திருடிய பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

அந்த பெண்ணின் அடையாளம் பற்றிய அனைத்து தகவல்களையும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.

Tags

Next Story