/* */

சோழவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு

சோழவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தாள்.

HIGHLIGHTS

சோழவரம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.இந்த செங்கல் சூளையில் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்துராமன் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முத்துராமன் மகள் வைஷ்ணவி (வயது 7) செங்கல் சூளையின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது சிறுமியை விஷ பாம்பு கடித்து சிறுமி கூச்சலிட்டதையடுத்து இதனை அறிந்த பெற்றோர்கள் . உடனே சிறுமியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சோழவரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாம்பு கடித்து சிறுமி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 July 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...