/* */

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை பறித்து செல்லப்பட்டது.

HIGHLIGHTS

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த   பெண்ணிடம்   நகை பறிப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் தசரத நகரில் நீதிபதி, மேஜிஸ்திரேட் என முக்கிய அரசு அலுவலர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளின் அருகே லாரி மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்றிரவு வீட்டை உள்பக்கம் பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தார்.

அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி சங்கிலி மற்றும் தங்க நகைகளை பறித்து கொண்டு வெளியே காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்றனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவைத்து கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 July 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?