/* */

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது
X

நாயை வெட்டிக்கொன்றதாக கைது செய்யப்பட்ட மூவர்.

மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஷ்வர் (வயது27). கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நண்பர் கிரண் என்பவரை சிலர் தாக்கி கொண்டிருந்த போது அதனை தடுக்க சென்ற புவனேஸ்வர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் புவனேஸ்வரை வெட்டிய மூவரும் அவரது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது புவனேஸ்வரின் நாய் அவர்களை பார்த்தது குரைத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் கொண்டு வந்த கத்தியால் நாயை வெட்டினர். இதில் நாய் அந்த இடத்திலேயே துடி துடித்து செத்தது.

இதுகுறித்து புவனேஸ்வர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நாயை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து சங்கர் (23), பிரபாகரன் (22), ரோகித் (22) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 May 2023 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?