பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது போலீசாரை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது போலீசாரை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது
X

போலீசாரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவர்.

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது போலீசாரை தாக்க முயன்ற ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்க முயன்ற ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனிப்படை உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருவர் காவல்துறையினரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏன் எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசை நோக்கி அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளனர். சுதாரித்த காவல்துறையினர் அதிலிருந்து தப்பி அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பொன்னேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான மகேஷ் ( வயது 40), ஜெயசாரதி ( வயது 20) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 4.பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற இச்சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai in future agriculture