/* */

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு

சோழவரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்:  தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவருடைய மகன் ராஜ்குமார் (27). சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேனேஜராக பணியாற்றி வந்தார். நேற்று பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை செல்வதற்காக சோழவரம் பைபாஸ் சாலை வளைவில் திரும்பும் போது பின்னால் வந்த அரியானா மாநில லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி ராஜ்குமார் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ்கர் (21) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜ்குமாருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Jun 2021 6:38 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி