Begin typing your search above and press return to search.
ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு!
ஆவாஜி பேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருட்டு, மாட்டு வண்டி பறிமுதல்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஆவாஜிபேட்டை கிராமத்தில் ஆரணி ஆற்றில் மணல் திருடுவதாக வந்த புகாரையடுத்து பெரியபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரியவந்தது. போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். பெரியபாளையம் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.