ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு
X



திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பாலமேடு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த செப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்., அவரது மகன் தருண்(17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். தருணின் தங்கை தேவி(14).இவர் அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று இருவரும் அத்திப்பட்டு அருகே உள்ள பாலமேடு ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கும், மீஞ்சூர் காவல் துறைக்கும் தகவல் அளித்தனர்.

இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture