/* */

ஆரணியாற்றில் உடைந்த தரைப்பாலம் சீரமைப்பு

- இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதி

HIGHLIGHTS

ஆரணியாற்றில் உடைந்த தரைப்பாலம் சீரமைப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் அருகில் புதிதாக மாற்று தரைப்பாலம் போடப்பட்டது. ஆனால், தற்போது பெய்த மழையால் அந்தக் தரைப்பாலமும் வெள்ள நீரால் உடைந்தது. இதனையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஆபத்தான முறையில் உயர்மட்ட மேம்பாலத்தை போக்குவரத்துக்காக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த நிலையில் ஆரணியாற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் மீது ஏறி செல்ஃபி எடுத்த போது ஒரு கல்லூரி மாணவன், இளைஞர் ஒருவர் என 2 பேர் உயர்மட்ட மேம்பாலத்தின் அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பி பட்டு, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைதொடர்ந்து பொது மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால், நெடுஞ்சாலை துறையினர், உடைந்த தரைப்பாலத்தை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

Updated On: 12 Jan 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!