/* */

கைதிகள் இடமாற்றம்

திருவள்ளூர் மாவட்ட, மத்திய கிளை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இடநெருக்கடி கொரோனா, பரிசோதனைக்கு பின்னர் பலத்த பாதுகாப்போடு சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அனைவரும் பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள மத்தியக் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உருவானதால், சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் அனைவரையும் சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர். அதனடிப்படையில் முதல் கட்டமாக பொன்னேரி மத்திய கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளுக்கு அரசு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் கைதிகள் 60 பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்போடு மூன்று வாகனங்களில் சென்னை புழல் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதேபோன்று மற்ற கிளை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் அடுத்தடுத்து சிறை மாற்றம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறை மாற்ற நடவடிக்கையால் கைதிகள் தப்பி செல்ல முயலக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைச்சாலை முன்பாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரிசையாக நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Updated On: 9 Jan 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!