Begin typing your search above and press return to search.
புழல் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தம்
சென்னையில் நேற்று திறக்கப்பட்ட புழல் ஏரியின் உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டது.
சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியின் நீர்மட்டம் நேற்று பெய்த மழையால் முழு கொள்ளளவான 21 அடியை எட்டியதால் நண்பகல் 1 மணியளவில் 500 கன அடி வீதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் காலை 6 மணி நிலவரப்படி 712 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது.