/* */

பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகளை தாக்கி சங்கிலி பறிப்பு - வழிப்பறி கும்பல் அட்டகாசம்

பழவேற்காடு சுற்றுலாத் தளத்தை பார்வையிட குடும்பத்தினரும் வந்தவரை வழிப்பறி கும்பல் சரமாரியாக தாக்கியதோடு, 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS



பழவேற்காடு சுற்றுலாத் தளத்தை பார்வையிட சென்னை கொளத்தூரை சேர்ந்த வல்லிக்கண்ணனும் அவரது குடும்பத்தினரும் வந்துள்ளனர். அப்போது கடற்கரையில் குளிக்கச் சென்ற இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அச்சம் அடைந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில், வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதோடு அம்மு என்பவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றதாக தெரிகிறது.


வழிப்பறி கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த வல்லிக்கண்ணன், அம்மு ஆகியோர் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா பயணிகளை தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2020 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...