ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது ஆரணி அத்திகுளம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அத்திகுளம்
பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அத்திகுளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில்.15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சியில் 200 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த 8.ஏக்கர் பரப்பளவு கொண்ட அத்திகுளம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் கடந்த ஆண்டுகளில் இந்த குளத்தில் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில். தற்போது நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்த பரப்பளவும் சுருங்கிப்போனது. மேலும் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் வீடுகளில் இருந்து கழிவு நீர் குளத்தில் திறந்து விடுவதோடு குப்பை கழிவுகளை இந்த குளத்தில் கொட்டிச் செல்கின்றனர் இதனால் தண்ணீர் மாசடைந்து போயுள்ளது.
மேலும் அதிலிருந்து துர்நாற்றம் பேசுவதோடு கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தின் கரைகளை பலப்படுத்தி தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu