வேட்டி தினம் கொண்டாடிய காவல் துறையினர்

வேட்டி வாரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் வேட்டி கட்டி கொண்டாடினர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேட்டி வாரத்தை கொண்டாடினர். எஸ்பி அரவிந்தன் தலைமையில், தனிப்படை காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், அமைச்சுப்பணி அலுவலர்கள் என அனைவரும் வேட்டி கட்டி கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய வேட்டியில் இருப்பது சுகமானது என எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!