திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
X

சென்னிமலைபாளையத்தில், அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள்.

திருப்பூர் அருகே சென்னிமலைபாளையத்தில், ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூரை அடுத்த நல்லூர் சென்னிமலைபாளையம் பகுதியில், அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்ரமித்து வைத்து இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவ்விடத்தை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதும், ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தலைமையில், தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் அருள்குமார் மற்றும் அதிகாரிகள், அங்கு சென்று ரூ.10 கோடி மதிப்பிலான அந்த இடத்தை மீட்டனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!