/* */

பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை

பல்லடத்தில், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை
X

பல்லடம் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா பெரியபட்டி, அப்பிலியபட்டி ஆகிய கிராமங்களில், கரித்தொட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால், கடும் மாசு ஏற்பட்டு வருவதாக கூறி, விவசாயிகள், பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் கூறியதாவது: கரி தொட்டியில் தேங்காய் தொட்டிகளை எரிப்பதால் வெளியேறும் கரி துகள்கள் காற்றில் கலந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விளை நிலங்கள், பயிர்கள் மற்றும் நீரில் கலந்து, விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நிலத்தடி நீர் மாசடைந்ததால், 10 கி.மீ., துாரம் சென்று தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகள், கண்துடைப்புக்காக ஆய்வு செய்வதை தவிர்த்து விட்டு, விவசாயிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் ஆலைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 12 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...