/* */

மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி: பல்லடம் அருகே பரபரப்பு

பல்லடம் அருகே ஒடிசா மாநில டிரைவர், மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி: பல்லடம் அருகே பரபரப்பு
X

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சிக்னல் கம்பத்தில் ஏறி தலைகீழாக தொங்கி குதிக்க முயற்சி செய்தார்.

தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் சென்று வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கேஷ்வர். 32 என்பதும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில், மர்ம ஆசாமிகள் 3 பேர் இவரை கத்தியால் குத்தி, செல்போன் மற்றும் ரூ.4,500 ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி பல்லடம் வந்தபோது, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Updated On: 23 April 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?