/* */

கேத்தனூரில் நூல் மில்லில் தீ விபத்து பல லட்சம் மதிப்பு பஞ்சு எரிந்து சேதம்

திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பஞ்சு எரிந்து சேதமானது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கேத்தனூரில் நூல் மில்லில் தீ விபத்து  பல லட்சம் மதிப்பு பஞ்சு எரிந்து சேதம்
X

கேத்தனூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ யை அணைக்கும் தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் முருகன் என்பவருக்கு சொந்தமான நூல் மில் செயல்படுகிறது. நூல் மில்லில், 2 ம் தார கழிவு பஞ்சு வைக்க தனி குடோன் உள்ளது.

இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது. இதை கவனித்த நூல் மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால், தீ மளமளவென பரவ துவங்கியது. இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பல்லடம் தீயணைப்பு வீரர்களும், நூல் மில்லில் 30 க்கும் மேற்பட்ட பணியாற்றும் தொழிலாளர்களும் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து காமநாய்க்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமக என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

Updated On: 18 July 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி