சிவன்மலை பெட்டியில் வெள்ளை சர்ட், பச்சை வேட்டி வைத்து சிறப்பு வழிபாடு

சிவன்மலை பெட்டியில் வெள்ளை சர்ட்,   பச்சை வேட்டி வைத்து சிறப்பு வழிபாடு
X

சிவன்மலை ஆண்டவன் பெட்டி

சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் பக்தரின் கனவில் கூறியபடி வெள்ளை சர்ட், பச்சை வேட்டி வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜைசெய்து வழிபடுவது வழக்கம்.

பின்னர் அந்த பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கல்தூணில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இதனை தரிசித்து வழிபட, பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள்.மேலும், கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை பக்தரின் கனவில் ஆண்டவன் தெரிவிப்பதாக நம்பப்படுகிறது.

இது 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்று அழைக்கப்படுகிறது. கண்ணாடி பெட்டிக்குள்வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் எதுவும் கிடையாது. வேறொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை வைக்கும் வரை, அதே பொருள் வைக்கபட்டு பூஜை நடைபெறும்.

கடந்த ஜூலை மாதம் கோவையை சேர்ந்த பக்தர்கனவில் வந்த, பஞ்சாங்கம், ஆதார்கார்டு, மணி, 10 ரூபாய் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில், பக்தர் கனவில் தோன்றியதாக இன்று பூ வாக்கு கேட்டு உறுதி செய்த பிறகு, அகத்தியர் ஜாதகம், இரண்டுபழைய 500, ரூபாய் நோட்டு மற்றும் 5, ரூபாய்,2, ரூபாய், 1, ரூபாய் நாணயம் என மொத்தம் 1008,ரூபாய் மற்றும் வெள்ளை சார்ட், பச்சை வேட்டி, துண்டு, எலுமிச்சை பழம், தேங்காய் வைத்து பூஜை செய்யப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future