/* */

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் தீ விபத்து: பொருட்கள் சாம்பல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூரில் உள்ள மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் தீ விபத்து: பொருட்கள் சாம்பல்
X

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் அமைந்துள்ளது. படியூர் பஸ் ஸ்டாப் எதிரே கணபதிபாளையம் செல்லும் ரோட்டில் ரஷீத்அலி,62, வாடகை இடத்தில் ரோவல் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்.

இந்த மில்லில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், காங்கேயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து, காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர். தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Updated On: 31 July 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?