/* */

சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

காங்கேயம் அருகே, சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

சிவன்மலை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நடப்பாண்டும் பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உதவி ஆணையர் முல்லை தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு, சில தளர்வுகளுடான சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. நடப்பாண்டு நவ.5 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை, கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும், மலைக்கோவில் மீது நடைபெறும். அரசின் வழிக்காட்டுதல்படி, நவ., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை, பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான 9 ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10 ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.

Updated On: 1 Nov 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்