கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்
X
மோளகவுண்டன்வலசில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுபாளையம் ஊராட்சி மோளகவுண்டன்வலசில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமில் அனைத்து வகையான காலநடைகளுக்கும் இலவசமாக சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள், மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

இன்ஹ முகாமில் மோளக்கவுண்டன்வலசு, மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துறையினர் செய்து இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture