/* */

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு
X

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டடுள்ளது. கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். மேலும், மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கான மருத்துவ வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.


Updated On: 5 Aug 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்