/* */

ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

ஆம்பூர் அருகே இனிப்பு வாங்க கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
X

ஆம்பூரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஜமில் அகமது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் சேர்ந்தவர் ஜமில் அகமது (வயது 22) இவர் ஆம்பூர் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இறைச்சி கடைக்கு அருகில் 7 வயது சிறுமி மாலை நேரத்தில் தின்பண்டம் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்பொழுது கடையில் விடுவதாக கூறி சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜமில் அகமது என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Updated On: 24 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!