/* */

ஆம்பூர் அருகே 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
X

ஆம்பூரில் நகை திருடு போன வீட்டில் விசாரணை நடத்திய போலீசார். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர், விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 10 சவரன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போயுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன், ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டிலும் பணம் கொள்ளை போயுள்ளது. அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். குமார் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளை போய் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 9 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?